எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!

Default Image

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு நடந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட  மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுது தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் மோடி, லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த 20 வீரர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்தார். மேலும், உயிரிழந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay