ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை சதவிகிதம் உயர்வு…!

Default Image

ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 42% உயர்வு.

நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த கொரோனா பாதிப்பு பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். அந்த வகையில் விமானப் போக்குவரத்துத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிய நிலையில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 63 சதவீதம் வரை குறைந்து இருந்தது. தற்போது உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக விமான பயணிகள் இருக்கை கட்டுப்பாடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடன் தர மதிப்பீட்டு முகமையான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 29 முதல் 30 லட்சமாக இருக்கும் என்றும், கடந்த மே மாதத்தின் 19.8 லட்சம் பயணிகளுடன் ஒப்பிடும்போது 41 முதல் 42 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிறுவனங்களின் இருக்கை கொள்ளளவும் கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடும்போது 46 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கொரோனா தொற்று குறைந்து வருவதை நிரூபிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்