வரதட்சனை வாங்காததால் மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய கணவருக்கு எதிர்ப்பு !

ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குச்சேயி கிராமத்தில் ஒரு வழக்கம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகின்றனர்.அங்கு உள்ளவர்கள் வரதட்சனை வாங்கலாம்

ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குச்சேயி கிராமத்தில் ஒரு வழக்கம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகின்றனர்.அங்கு உள்ளவர்கள் வரதட்சனை வாங்கலாம் யாரும்  திருமணம் செய்யக்கூடாது என்ற பழக்கம் உள்ளது.

அக்கிராமத்தில் பெண் ஒருவர் நோய் வாய்ப்பட்டு இருந்து உள்ளார்.அவர் திருமணம் செய்த போது பெண் வீட்டார்  2 மாடு , ஒரு ஆடு  மற்றும் மூன்று சேலைகள் தருவதாக கூறி இருந்தனர்.ஆனால் அவர்கள் அந்த வரதட்சனையை பெண் வீட்டார் தரவில்லை.

unknown node

இதனால் ஊர் மக்கள் அவரின் உடலை தகனம் செய்ய கணவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்பெண் இறந்து மூன்று நாள்கள் ஆகியும் ஊர் மக்கள் உடலை தகனம் செய்ய அனுமதி கொடுக்கவில்லை.

இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கிடைத்த பின் அங்கு வந்த  போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை செய்ய பின்னர் அப்பெண்ணின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் அனுமதி கொடுத்தனர்.