காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி. க்கள் போராட்டம்

Default Image

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி. க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் மாநிலங்களவையில்  மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டதால் எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் இதனை செய்யவில்லையென்றால் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில்  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி. க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்