மொத்தமுள்ள 736 மாவட்டங்களில் 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை- ஹர்ஷ் வர்தன்

Default Image

இந்தியாவில்  மொத்தமுள்ள 736  மாவட்டங்களில் 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாகத்தான் முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கைக்காக நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில எல்லைகளும்,மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் செய்தியாளகர்ளை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.அதேநேரத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்