பிரணாப் முகர்ஜின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை – மருத்துவமனை நிர்வாகம்

Default Image

பிரணாப் முகர்ஜின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், மூளையில் கட்டி இருந்ததை அடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிரணாப்புக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்