நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்.!

Default Image

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் நிர்பயா குற்றவாளி.

இதனிடையே கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு வரும் 20ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு விட்ட நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்