எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மூச்சு திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரக்யா சிங் தாக்கூர் போபாலைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை 4.15 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர் ரன்தீப் குலேரியாவின் மேற்பார்வையில் உள்ள ஒரு தனியார் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவருக்கு மூச்சு திணறல், மார்பு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதான எம்.பி.க்கு ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, டிசம்பர் 18 அன்று, கொரோனா அறிகுறிகளுடன் எய்ம்ஸில் பிரக்யா சிங் தாக்கூர் அனுமதிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை அடுத்த நாள் (டிசம்பர் 19) தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் திட்டமிடப்பட்டது. இந்த வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025