கேரளாவில் முதல் முறையாக 2,000-க்கும் மேல் கொரோனா பாதிப்பு.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,333 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று 2,333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 7 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல்.
17,382 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 1,217 பேர் குணமடைந்தனர். இதுவரை 32,611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.