2 கோடி செலவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ!

Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy has shown MLA Madhusudan Reddy a temple at a cost of Rs 2 crore.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு இரண்டு கோடி செலவில் மதுசூதன் ரெட்டி எனும் எம்.எல்.ஏ கோவில் ஒன்றை காட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அம்மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வரும் நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி என்பவரால் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இரண்டு கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஜெகன்னா நவரத்தினா கோவில் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இருக்கக்கூடிய பணியாளர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் கூட செப்பு இலைகள் மீது பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த கோவிலுக்கு வருவோருக்கு ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் செய்த நல திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிநிதிகளும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதல்வர் ஒருவருக்கு இத்தனை பிரமாண்டமாக 2 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டுள்ள சம்பவம் பலரையும் பிரமிப்படைய செய்துள்ளது.