சுரங்க விபத்து – இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்பு பணிகள்..! தயார் நிலையில் மருத்துவக்குழு..!

Uttarakhand Uttarkashi Silkyara mine accident

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி இந்த விபத்து நடைபெற்றது.

இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 11 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 12 மணி அளவில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு செங்குத்தாக சுரங்கப்பாதை தோண்டப்பட்டது.

உத்தரகண்ட் சுரங்க விபத்து : இன்று மாலை நல்ல செய்தி வரும்.! மீட்புக்குழு தகவல்.! 

இதனை தொடர்ந்து, 8 குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக 9 குழாய் பாதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சாறு நேரத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர் மீட்கப்படவுள்ளனர்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. சுரங்க விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வருகை புரிய உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்