சற்று நேரத்திற்கு முன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.
இந்நிலையில், மணிப்பூர் காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜாம் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி காலமானதைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது. நாட்டின் ஒரு சிறந்த புத்திஜீவியை இழந்துவிட்டோம்.
அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள் ஐயா, ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
unknown node