#Plane Crash: கேரளா விமானம் விபத்து.. விமானி உயிரிழப்பு..!

Default Image

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்தனர்.

தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சில பயணிகள் கவலைக்கிடமாக உள்ளதாக  தகவல் தெரிவிக்கிறது .இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .மேலும் தேசிய மீட்டப்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த விமானம் துபாயிலிருந்து, கோழிக்கோடு வந்ததால் அதிக பயணிகள் இந்தியாவை சார்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்தார்களா..? என விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் முழு விவரம் தொடர்ச்சியாக பதிவிடப்படும் ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்