காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு திடீர் ராஜினாமா! புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்!

Default Image

புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்.

ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநரான முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் என்ன காரணத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று உறுதியான தகவல் வெளியகாத நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முர்மு அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பிய நிலையில், அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது, புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2014 – 2019-ல் பாஜகவில் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்