ஐந்து மாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து.! ஒருவர் பலி.! 25 பேர் மீட்பு.!

Default Image

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டதில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து இருந்த மக்கள் சிக்கியுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் எத்தனை பேர் உள்ளே சிக்கியுள்ளார்களோ அவர்களுக்கு ஏன்னா ஆனதோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

முதலில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 மாடிகள் மட்டுமே இடிந்து விழுந்ததாம் அதனை அறிந்த மற்ற குடியிருப்புவாசிகள் அங்கிருந்து தப்பித்து வேறு பாதுக்காப்பான இடத்திற்கு சென்றுவிட்டனராம். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்