“தோனி விளையாடவுள்ள இறுதி போட்டியை ராஞ்சியில் நடத்த வேண்டும்”- பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்த ஜார்கண்ட் முதல்வர்!

Default Image

தோனியை கவுரவிக்கும் வகையில், அவர் விளையாடவுள்ள இறுதி போட்டியை ராஞ்சியில் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் மாநில முதல்வர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டார். அதில் அவர், “எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

திடீரென தனது ஓய்வினை அறிவித்த தோனியின் செயலை அறிந்த ரசிகர்கள், மனமுடைந்தனர். இதன்காரணமாக ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், தோனியை கவுரவிக்கும் வகையில், அவர் விளையாடவுள்ள இறுதி போட்டியை ராஞ்சியில் நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்