கொரோனா தொற்று அதிகரிக்கும்போது மக்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் – கேரள முதல்வர் அறிவுறுத்தல்!

Default Image

கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரங்களில் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு இருங்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே, கேரளாவில் மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேர்தல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். மேலும், மக்கள் கொரோனா தொற்று அதிகரிக்கும் காலங்களில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புதியதாக கேரளாவில் ஆக்சிஜன் ஆலை அமைக்கக் கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். சந்தைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வரக்கூடிய மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இரட்டை முக கவசம் அணியுமாறும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்