“பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் நிலத்தை சீனாவால் கைப்பற்றப்பட்டது”- ராகுல் காந்தி!

Default Image

லடாக் எல்லையில் பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும்போது சீனா இந்தியாவின் நிலத்தை சீனாவால் கைப்பற்றப்பட்டது என தெரிவித்தார்.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு உயர் அதிகாரிகள் தரப்பிலும், தூதரக அளவிலும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தது.

அந்த பேச்சுவார்த்தை முடிவில், இருநாட்டு ராணுவமும் எல்லையிலிருந்து விலகி சென்றது. இதனால் அங்கு நீடித்த பதற்றம் பெரும்பாலும் குறைந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, ஞாயிற்றுக்கிழமை லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக மீண்டும் மத்திய அரசை விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இருக்கும்போது சீனா இந்தியாவின் நிலத்தை “கைப்பற்றியது” என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டார். அதில் அவர், “பிரதமர் மோடியின் ஆட்சியில் என்ன நடந்திருக்கிறது? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லைப்பிரச்னையில் ஊடங்களை மத்திய அரசு தவறாக வழிநடத்தி விட்டதாகவும், எல்லையில் நடந்த மோதல், இந்தியாவுக்குப் பின்னடைவே என ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
TN CM MK Stalin speak in Tamilnadu Climate Change Summit 3.O
Shivam Dube Creates History
R Ashwin praise Himanshu sangwan
BJP MLA Vanathi Srinivasan
tamilnadu gold store purchsae
Chennai Snow Fall