7.5 லட்சம் சிகரெட்களை கடத்தி சென்ற இந்தியர்கள் டெல்லியில் கைது!

துபாயிலிருந்து 7.5 லட்சம் சிகரெட்டுகளை கடத்தியதற்காக 13 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தனது வீரியத்தை சற்றும் குறைத்து கொள்ளாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலர் இதனால் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். சிலர் வறுமையில் வாடினாலும், பலர் தங்களுடைய வாழ்க்கை முறைகளை தவறான பாதையில் நடத்திச் செல்கின்றனர்.
7.5 லட்சம் சிகரெட்டுகளை இந்தியாவிற்கு கடத்தியதாக டெல்லி விமான நிலையம் ஆகிய ஐஜிஐ விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் 13 இந்திய பயணிகளை கைது செய்துள்ளனர். இதன் மதிப்பு மட்டும் 66 லட்சம் டாலர்களாம். கைது செய்யப்பட்டுள்ள 13 பயணிகளும் 26 முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் பயணிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் வேலைக்காக சென்று கொரோனா வைரஸ் காரணமாக வேலை இழந்து அங்கே இருந்தவர்கள் தான் இந்த 13 பேரும் என்பதும் தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025