இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது…! – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

Default Image

இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து.

டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவையில் ரயில்வே துறைக்கு கோரப்படும்  மானியங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் பேசினார். அவர் பேசுகையில் இந்திய ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து.

ரயில்வே துறை இந்திய அரசிடம் தான் இருக்கும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் இணைந்து செயல்படும்போதுதான் நாடு அதிக வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்தில் விபத்து காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. 2019 மார்ச் மாதம் கடைசியாக ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்