Air Force Plane Crash:
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் யாரும் இல்லாத நிலையில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விரைந்துனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்திய விமானப் படையினர் வழக்கமான பயிற்சியின் போது, இந்த ஆளில்லா விமானம் ஒன்று ஜெய்சால்மரில் இருந்து 30 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் விபத்துக்குள்ளானது என்றும், இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று IAF அதிகாரி ஒருவர் கூறிஉள்ளார்.
unknown node