உலகின் உயரமான இரு ரயில்வே பாலங்களை உருவாக்கும் முயற்சியில் இந்தியா!

Default Image

உலகின் மிகவும் சவாலான ரயில் போக்குவரத்துக்கு ஏற்ற இரண்டு பாலங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வே அமைப்பு.

இந்தியாவில் உலகிலேயே மிகவும் சவாலான இரண்டு பாலங்களை நிர்ணயிக்கக்கூடிய முயற்சி நடைபெற்று வருகிறது. ஒன்று  ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நந்திக்கு மேலேயும், மற்றொன்று மணிப்பூரிலும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் பாலம் கட்டும் பணியில் தற்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே போக்குவரத்து துறையில் மிகவும் உயரமான தூண்களுடன் கூடிய பாலத்தினை மணிப்பூரில் உள்ள நோனி ஆற்றின் குறுக்கே கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த உயரமான பாலம் இந்திய ரயில்வேயால் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. 141 மீட்டர் உயரத்தைக் கொண்டிருக்கும் இந்த பாலம், ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவின் ரிஜேகா வையாடக்டில் மாலாவின் 139 மீட்டர் பாலத்தின் சாதனையை இந்த உயரம்  முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் 703 மீட்டர் நீளம் கொண்டு, ஹைட்ராலிக் ஆகர்ஸ் நுட்பத்தை பயன்படுத்தி தூண்கள் வலுவாக கட்டப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்