வடகொரியாவுக்கு 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவிகளை செய்ய இந்தியா முடிவு

Default Image

உலக சுகாதார நிறுவனத்தின்  (WHO) வேண்டுகோளின் படி   இந்தியா சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவியை வட கொரியாவுக்கு வழங்க உள்ளது  என்று வெளியுறவு அமைச்சகம்    தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம்    வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வடகொரியாவின்  மருத்துவ விநியோக  பற்றாக்குறையை இந்தியா உணர்கிறது மற்றும் காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் வடிவத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது  என்று  தெரிவித்துள்ளது.

வட கொரியாவிற்கு செய்யப்படும் மருத்துவ உதவி உலக சுகாதார நிறுவனத்தின்  காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் உள்ளது என்று அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்