சரியாக வரி செலுத்துபவர் என்ற முறையில் இதை அறிய விரும்புகிறேன்..! தோனி மனைவியின் அதிரடியான ட்வீட்..!

Default Image

சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என தோனியின் மனைவி ட்வீட்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்த கோடை காலங்களில் அனைவருமே, மின்வெட்டு ஏற்படக்கூடாது என்று தான் விரும்புவர். ஆனால், தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்வெட்டு தொடர்கிறது.

அந்த வகையில், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக நிலக்கரி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் மின்வெட்டுப் பிரச்சினை நிலவுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 5 மணி நேரமும், உத்தரப்பிரதேசம் பஞ்சாப் மாநிலங்களில் 8 மணி நேரம் மின்தடை நீடிப்பதாகவும், ஆந்திரா, மகாராஷ்டிரா,. ஜார்கண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் இனிமேல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்படக்கூடிய மின்வெட்டு தொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். நாங்கள் மின் சக்தியை சேமித்து வரும் பணியை, எங்கள் பங்கிற்கு சரியாகவே செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்