கனமழை, சூறாவளி காற்று என 170 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த ஆம்பன்..!

Default Image

வங்கக்கடலில் உருவாகி அதிதீவிரமடைந்த ஆம்பன் புயல், மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

இந்நிலையில், 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், தற்பொழுது கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் 170 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் கொல்கத்தா, ஹவுரா, உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk