ஹரியானா: 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு செப்.20 முதல் பள்ளிகள் திறப்பு..!

Default Image

ஹரியானா மாநிலத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20 முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அலையில் சிக்கி தவித்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு கடைபிடித்து வந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியவுடன் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.

ஹரியானா அரசு செப்டம்பர் 20 முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் திறக்கவுள்ளது. இதன் வகுப்புகள் கண்டிப்பாக கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் முதலில் ஜூலை 16 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.  பின்னர், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 23 அன்று பள்ளிகள் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இப்போது 1 முதல் 3 வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 20 அன்று திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பெற்றோரிடமிருந்து முன் அனுமதி கடிதம் பெற்று வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் வெப்பப்பரிசோதனை செய்யப்படும். சாதாரண வெப்பநிலைக்கு மேல் இருக்கும் மாணவர்கள் யாரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்