அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு விலையில்லா மருத்துவம்… உபி முதல்வர் புதிய அறிவிப்பு.!

Default Image

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்தவ சேவை வழங்கும் திட்டத்தை அறிவித்தார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு உதவியாக அவர்ளுக்கு இலவச மருத்தவ சேவைகளை வழங்கும் உத்தரவு.

அதாவது, பதவியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அரசு நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேவை மற்றும் மருந்துகள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும்,

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தகுதியானவர்களை கண்டறிந்து மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்