கடந்த சில நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு எந்த ஒரு கோப்பும் வரவில்லை- கிரண் பேடி

Default Image

கடந்த சில நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு எந்த ஒரு கோப்பும் வரவில்லை என்று  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இதன் பின் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கடந்த சில நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு எந்த ஒரு கோப்பும் வரவில்லை. கோப்புகள் வராதது பற்றி புதுச்சேரி நிர்வாகி என்ற முறையில் மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்