இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ஃபரூக் அப்துல்லா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மகன் உமர் அப்துல்லா ட்விட்டரில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஃபரூக் அப்துல்லா லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ஃபரூக் அப்துல்லா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாகவும், அவரது குடும்பத்தினரின் உடல்நலத்திற்காக பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
unknown node