மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி – ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு

Farooq Abdullah

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் சுமார் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகிய இந்தியா கூட்டணியில் தற்போது அடுத்தடுத்து பெரும் அடி விழுந்து வருகிறது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை, அதிருப்தி, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து … Read more

கிரிக்கெட் சங்க ஊழல்..! ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

கிரிக்கெட் சங்க ஊழலில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவரான 86 வயது பரூக் அப்துல்லா, ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஆவார். இவர் ஜம்மு – காஷ்மீர் கிரிக்கெட் சங்க (JKCA) நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த போது பல்வேறு நிதி முறைகேடு நடந்ததாக … Read more

ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல..! ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பேட்டி.!

J&K Ex CM Farooq Abdullah says about God Ram

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுளள ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேக விழா (Pran  Pratishtha) வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி விழா ஆரம்பித்து, ஜனவரி 22ஆம் தேதி  மதியம் 12.45மணிக்குள் முக்கிய நிகழ்வான கருவறையில்  ராமர் சிலை நிறுவப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் , உ.பி மாநில முதல்வர் யோகி … Read more

ஃபரூக் அப்துல்லா விரைவில் குணமடைய வேண்டும்…! பிரதமர் மோடி ட்வீட்…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ஃபரூக் அப்துல்லா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாக ட்வீட் செய்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  அவரது மகன் உமர் அப்துல்லா ட்விட்டரில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஃபரூக் அப்துல்லா லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது … Read more

ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி..!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  அவரது மகன் உமர் அப்துல்லா ட்விட்டரில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஃபரூக் அப்துல்லா லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. My father has tested positive for COVID-19 & is showing some symptoms. I will be … Read more

பரூக் அப்துல்லா விடுவிப்பு -திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு

பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை … Read more

எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை – விடுதலையான பரூக் அப்துல்லா பேட்டி

எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.எனவே ஸ்ரீநகரில் … Read more

#Breaking : 7 மாதங்களுக்கு பிறகு பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

பரூக் அப்துல்லா வீட்டுக்க்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.   இந்நிலையில் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் … Read more

ஃபரூக் அப்துல்லா எங்கே?30-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஃபரூக் அப்துல்லா எங்கே  என்பது குறித்து வரும் 30-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது .இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில்  ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் … Read more

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த மனு! இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த மனு   உச்சநீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ சார்பில் … Read more