விவசாயிகள் போராட்டம்! ஹரியானாவின் 7 மாவட்டங்களில் மீண்டும் இணைய சேவை தொடக்கம்

விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவையை அரசு முடக்கியிருந்த நிலையில் தற்போது அந்த 7 மாவட்டங்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இதையடுத்து, பேரணிக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே, அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க மாநிலத்தின் முதல்வர் மனோகர் லால் கத்தார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். பொது ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இணைய சேவை முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More – 554 ரயில் நிலையங்கள்… 1,500 ரயில்வே மேம்பாலங்கள் திட்டப்பணிகள்.! பிரதமர் மோடி துவக்கம்.!

விவசாய போராட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை பிப்ரவரி 29-ம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனர். இந்த நிலையில், அந்த 7 மாவட்டங்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்பாலாவில் வசிக்கும் மக்கள் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பல நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்