ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு போலி நெகட்டிவ் சான்றிதழ் – 4 பேர் கைது!

Four people have been arrested in connection with the issuance of a fake negative certificate to a victim of an omega-3 infection.

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு போலி நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் ஆபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரேன் வகை கொரோனா தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு  கர்நாடக மாநிலம் பெங்களூரில் போலியான நெகட்டிவ் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.