பரபரப்பு…தலைநகரில் துப்பாக்கி சூடு – பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

Default Image

நாட்டின் தலைநகரான டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுபாஷ் பிளேஸ் போக்குவரத்து சந்திப்பில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது,நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதனால், காரை முன்னோக்கியும் பின்னோக்கியும் அவர்கள் இயக்கிய நிலையில்,மர்ம நபர்கள் அவர்களை துரத்தி சென்று சுட்டனர்.

இதனால்,படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதனையடுத்து,துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அனைத்து கோணங்களிலும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குழுக்கள் அமைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்