#BREAKING: இந்தநாள் அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினம் – லட்சத்தீவு நிர்வாகம் அறிவிப்பு

Default Image

லட்சத்தீவு நிர்வாகம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவிக்கப்படுகிறது என்று லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சைக்கிள் தினம் நாளை (ஏப்ரல் 6) முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து லட்சத்தீவு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற 13-வது லட்சத்தீவு மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (எல்பிசிசி) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லட்சத்தீவு நிர்வாகம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கான சைக்கிள் தினமாக அறிவிக்கிறது.

இந்த நாளில் (அதாவது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை) அனைத்து அதிகாரிகள் / பணியாளர்கள் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் தவிர) பணிக்கு வரும்போது மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடாது. லட்சத்தீவு யூடியின் அனைத்து தீவுகளிலும் சைக்கிள்கள் போன்ற மோட்டார் அல்லாத போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து மத்திய மாநில அரசுகளின் ஊழியர்கள் இப்படி வாரத்தில் ஒருநாள் மிதிவண்டியில் அலுவலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும்? என்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஒழிப்பதற்கு உதவியாக இருக்கும், அதேவேளை ஊழியர்கள் ஆரோக்கியம் நலமாக இருக்கும்! என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு, லட்சத்தீவு நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்