9 போலீஸ் அதிகாரிகளிள் இடமாற்றம் உத்தரவை ரத்து செய்த அடுத்த மூன்று நாளில் மீண்டும் அதே பதவியில் 8 போலீஸ் அதிகாரிகளை தாக்கரே இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மகாராஷ்டிரா முதலமைச்சரான உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள 9 துணை போலீஸ் கமிஷனர்களின்(டி. சி. பி) இடமாற்றங்களை ரத்து செய்துள்ளார் . அதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இந்த 9 டி. சி. பி-களில் ஒருவரை தவிர்த்து 8 பேரை அதே பதவியில் தாக்கரே இடமாற்றம் செய்துள்ளார். ஒரே வாரத்தில் நடந்த இந்த 8 அதிகாரிகளின் இடமாற்றங்கள் காவல்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஷாஹாஜி உமாப் கண்டறிதலுக்கான டிசிபி பிரிவிலிருந்து கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டார். மேலும் ஐபிஎஸ் அதிகாரி பிரணே அசோக் டிசிபி(ஆபிரேஷன்ஸ்) ஆக பதவியேற்றார். அவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காலியாக இருந்த மண்டலம் 5 ல் புதிய டிசிபியாக மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து மண்டலம் 7-ல் டிசிபியாக மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பரம்ஜித் தஹியா மண்டலம் 3-ல் டிசிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 9 டிசிபிகளில் தக்க வைக்கப்பட்டுள்ள சங்கிராம்சிங் நிஷந்தர் மமண்டலம் 1-ல் முன்னதாக டிசிபியாக இருந்து டிசிபி (ஆபிரேஷன்ஸ்) பிரிவில் மாற்றப்பட்டார். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வந்த உத்தரவில் இவரது பெயர் இடம்பெறவில்லை.