அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு!

Default Image

அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் நீட்டிப்பு வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, தேர்தலையொட்டி ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. பின் இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 2ம் நேதி திகார் சிறையில் சரணடைந்தார். அதனை தொடர்ந்து, கெஜ்ரிவால் மருத்துவ பரிசோதனைக்காக 7 நாட்கள் ஜாமீன் கேட்ட நிலையில், ஜாமீன் நீட்டிப்பு வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்