டெல்லி : காசிப்பூர் சந்தை பகுதியில் மர்ம பையில் வெடிகுண்டு கண்டெடுப்பு ...!

A bomb has been found in a mysterious bag in the Gazipur market area in the capital Delhi.

தலைநகர் டெல்லியிலுள்ள காசிப்பூர் சந்தை பகுதியில் மர்ம பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள காசிப்பூர் மலர் சந்தை அருகில் வெடிகுண்டுகளுடன் கூடிய மர்ம பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு பை கண்டறியப்பட்டதும் காவல்துறையினர் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பையிலிருந்த வெடிகுண்டுகளை, வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர். பரபரப்பாக பொதுமக்கள் இயங்கி வரக்கூடிய மலர் சந்தையில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.