டெல்லி காற்று சிகரெட் புகையை விட மோசமாக உள்ளது – மருத்துவர் ரன்தீப் குலேரியா!

Doctor Randeep Gularia said the air in Delhi is worse than cigarette smoke.

டெல்லி காற்று சிகரெட் புகையை விட மோசமாக உள்ளது என மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு பின்பதாக டெல்லியில் காற்று மாசு அதிக அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் நுரையீரல் நிபுணர் ரன்தீப் குலேரியா அவர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

அதாவது டெல்லியில் உள்ள காற்று தற்பொழுது சிகரெட் புகையை விட மிக மோசமானதாக மாறியுள்ளதாகவும், டெல்லியில் வசித்து வரக்கூடிய மக்களின் ஆயுட்காலம் கணிசமாக குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க கூடிய டெல்லி வாசிகளின்  நுரையீரல் கருப்பாக மாறி இருப்பதாகவும், தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் வாகன இயக்கம் அதிகம் இருப்பதும் இந்த மாசுபாட்டிற்கு காரணமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.