மகாராஷ்டிரா: அக்டோபர் 22 முதல் திரையரங்குகள் திறப்பு..!

Default Image

மகாராஷ்டிராவில் வருகின்ற அக்டோபர் 22 முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், அவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா தொடர்பான அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றினால், சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் அக்டோபர் 22 முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 4 முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்புகளும் மீண்டும் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்