திருமணத்திற்கு முன் போட்டோஷூட் நடத்திய தம்பதிகள்! தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!

Default Image

திருமணத்திற்கு முன் போட்டோஷூட் நடத்திய தம்பதிகள். காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்.

பெங்களூரு, மைசூர் கட்டமரனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (28) – சசிகலா (20). இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நிச்சயம் நடைபெற்றது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் காவிரி ஆற்றில் ஒரு படகின் மீது நின்று, போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது, படகு கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. இருவரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில், போட்டோகிராஃபர் மற்றும் அவருடன் உதவிக்கு வந்த சிறுவன் இருவரும், அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால், இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஆறறில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம்  குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6
mk stalin - RN RAVI