இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியான மருத்துவ மாணவி வீடு திரும்பினார்.!

Default Image
  • இந்தியாவில் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியராக கண்டறியப்பட்ட மருத்துவ மாணவி வீடு திரும்பினார்.
  • இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மதிலகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த கொரோனா வைரசால் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது.முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவில் இருந்து கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் இந்தியா வந்தபோது இந்தியாவில் அவருக்கு தான் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியராக கண்டறியப்பட்டார்.

இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மதிலகத்தை சேர்ந்தவர்.பின்னர் அவரை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தனி அறையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதுடன் ,தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இதன் பலனாக அவருக்கு நடந்தப்பட்ட சோதனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை நீங்கியது தெரியவர அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மருத்துவக்கல்லூரிக்கு  மருத்துவ வாரியம் கூறியது. பின்னர் அந்த மாணவி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதற்குமுன் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்