கர்நாடகாவில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை விலை குறைப்பு..!

Default Image

கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்ட முடிவில் தெரிவித்ததாவது,

கர்நாடகாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை குறைக்குமாறு தெரிவித்தனர். அதில், தனியார் மருத்துவமனையில் பொதுவார்டில் சிகிச்சை அளிப்பவர்களுக்கு 33% கட்டணம் குறைக்கப்படும். ஆக்ஸிஜன் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு வார்டில் 40% விலைக் குறைப்பும், தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு வார்டுகளில் 28.57% விலைக் குறைப்பையும், வென்டிலேட்டருடன் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவில் 28.57% விலையை குறைக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

அதாவது, பொது வார்டுக்கு ரூ. 10,000மும், ஆக்ஸிஜன் வசதியுடன் வார்டுக்கு ரூ. 12,000 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவுக்கு வார்டுகளுக்கு ரூ. 15,000, மற்றும் வென்டிலேட்டருடன் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவுக்கு- ரூ. 25,000 என விலை நிர்ணயிக்குமாறு தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 14 நாட்கள் பணிகளை செய்யுமாறும், 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்