அம்பன் புயல் மீட்புப்பணியில் ஈடுபட்ட 49 வீரர்களுக்கு கொரோனா .!

Default Image

அம்பன் புயல் மீட்புப்பணியில் ஈடுபட்ட 49 என்.டி.ஆர்.எப். வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, மே 20-ம் தேதி அதிதீவிர புயலாக மாறியது.  இதனையடுத்து, 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான பாலங்கள், வீடுகள், மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தது.

இந்த புயலால் 80-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக மேற்கு வங்கம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடியும் , ஒடிஷாவிற்கு ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கினார். புயலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் படையும் என்.டி.ஆர்.எப். படையும்  வரவழைக்கப்பட்டது.

இவர்களில் 178 வீரர்கள் தங்களது பணி முடிந்து ஒடிசாவிற்கு சென்றனர். மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால்  வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில். 49 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுபி சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk