ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்த பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

பஞ்சாப் மாநிலத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள் கிழமை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், இந்தப் போராட்டத்தில்  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர்  பால்பீர் சிங் சித்து ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்த அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்