கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 6,324 பேருக்கு கொரோனா.!

Default Image

கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக 6,324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 6 ஆயரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று 6,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 613 பேர் ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, மருத்துவமனையில் 45,919 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனாவிலிருந்து 3,168 பேர் குணமடைந்தனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
IND vs PAK
dragon movie box office
kaliyammal seeman
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon