மஹாராஷ்டிராவில் மேலும் 15,591 பேருக்கு கொரோனா!

Default Image

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 15,591 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 15,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,16,513  ஆக உயர்ந்தது.

அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 424 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,480 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 13,294 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,17,720 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 2,60,876 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்