கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில்!

Default Image

கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என அறிவிப்பு.

கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை இரு தவணையாக செலுத்திக்கொண்ட  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக (பூஸ்டர் டோஸாக) Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில்  கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் அல்லது 26 வாரங்கள் முடிந்த பிறகு, Corbevax பூஸ்டர் டோஸ் செலுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவனம் கார்பேவாக்ஸ் மருந்தை கண்டுபிடித்துள்ளது. பொது பயன்பாட்டுக்காக இதுவரை 10 கோடி டோஸ்களை இந்நிறுவனம் மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, கொரோனா பூஸ்டர் டோஸாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய தடுப்பூசியாகும். தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கான கார்பேவாக்ஸ்-யின் விலை சரக்கு மற்றும் விற்பனை வரி உட்பட ரூ.250 என்றும் இறுதிப் பயனருக்கு, தடுப்பூசியின் விலை வரிகள் மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட ரூ.400 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்