ராமர் கோயில் கட்டுவதற்கு 51 லட்சம் நன்கொடை வழங்கிய காங்கிரஸ் எம்.ஏ.ஏ அதிதி சிங்!

Default Image

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் இதற்காக 51 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த வருடமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இதற்கான கட்டுமான பணிகளுக்கான நன்கொடை வசூலிப்பு உலகம் முழுவதிலும் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில் பலரும் தாராளமாக நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 51 லட்சம் பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அதிதி சிங், நான் இந்த பணத்தை வழங்கினாலும் எனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் சார்பாக தான் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்