எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

Default Image

பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  கடந்த வெள்ளிக்கிழமை(செப்டம்பர் 25-ஆம் தேதி )  உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன் பின் சனிக்கிழமை (செப்டம்பர் 26-ஆம் தேதி) தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.ஆனால் இவருக்கு ” பாரத ரத்னா ” விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு  பாரத ரத்னா விருது வழங்க  வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்