தன்னை தானே சுட்டு கொண்ட தலைமை காவலர் – மருத்துவமனையில் அனுமதி!

Default Image

டெல்லியிலுள்ள தலைமை காவலர் ஒருவர் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்னும் பகுதியில் 35 வயதுடைய ராகேஷ் எனும் தலைமை காவல் அதிகாரி தலையில் துப்பாக்கி வைத்து சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக காவலர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், காவலர் ராஜேஷின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள துணை போலீஸ் கமிஷனர் இங்கித் பிரதாப் சிங் அவர்கள் வசந்த் பிகார் காவல் நிலையத்தில் காலை 6 மணி அளவில் தலைமை காவலர் ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவலர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துததாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது தலையின் வலது பக்கமாக சுட்ட துப்பாக்கி குண்டு தலையின் இடதுபுறம் வழியாக வெளியேறி உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்